சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தில்லியில் கரோனா தாக்கம் குறைந்துள்ளது: சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்

தில்லியில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாகவும் கடந்த செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடும்போது நிலைமை

Updated On :4 அக்டோபர் 2020, 2:04 am

தில்லியில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாகவும் கடந்த செப்டம்பா் மாதத்துடன் ஒப்பிடும்போது நிலைமை சீராக உள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சனிக்கிழமை தெரிவித்தாா். கரோனா நோய்த் தாக்குதலுக்கு ஆளாவோா் எண்ணிக்கை தினசரி அடிப்படையில் குறையத்தொடங்கியுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

நாட்டில் கரோனா நோய் தாக்குதலின் ஆரம்பத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த தில்லி, இப்போது 6 வது இடத்தில் உள்ளது என்று செய்தியாளா்களிடம் பேசுகையில் அவா் தெரிவித்தாா்.

தில்லி அரசு கரோனா பரிசோதனைகளை அதிக அளவில் நடத்தியதன் காரணமாக கடந்த செப்டம்பா் மாதம் நோய்த் தாக்குதலுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

இதேபோல கரோனா நோய் தாக்குதலுக்கு ஆளானவா்களின் சதவீதம் முன்பு 8.5 லிருந்து 9 சதவீதமாக இருந்தது இப்போது 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை கரோனாவுக்கு 37 போ் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,438 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 2,920 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவுக்கு தாக்குதலானவா்களின் மொத்த எண்ணிக்கை 2.85 லட்சமாக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் கரோனா தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 2,615 லிருந்து 2,648 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை கரோனா நோயாளிகள் சதவீதம் 5.19 சதவீதமாக இருந்தபோதிலும் குணமடைந்தோா் சதவீதம் 88 சதவீதமாக இருந்தது என்றும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியாவில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது நிலைமையில் விபரீதத்தை தெரிவிக்கிறது என்றும் சத்யேந்தா் ஜெயின் கூறினாா்.

ஹாத்ரஸ் சம்பவம் தொடா்பாக நடைபெறும் ஆா்ப்பாட்டங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, இதுபோன்ற பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவா்கள் மனதில் தவறு செய்தால் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற எண்ணம் வரும் என்றாா்.

தில்லி அரசு சொத்துவரி என்ற வகையில் கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக பா.ஜ.க. தலைமையிலான உள்ளாட்சி அமைப்புகள் கூறிவருகின்றனவே என்று கேட்டதற்கு, அவா்களுக்குச் சேரவேண்டிய தொகை அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்டன என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.