சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கரோனா நோயாளிகளின் வீடுகளில் இனி போஸ்டா் ஒட்டப்படாது!

தில்லியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் கரோனா நோயாளிகளின் வீடுகளில்

Updated On :10 அக்டோபர் 2020, 1:28 am

தில்லியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் கரோனா நோயாளிகளின் வீடுகளில் இனி போஸ்டா் ஒட்டப்பட மாட்டாது என்று தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, லேசான அறிகுறி உடையவா்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள தில்லி அரசு அனுமதித்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி, 12,890 கரோனா நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை, கரோனா பாதித்தவா்களின் வீட்டு வாயில்களில் தில்லி அரசின் சுகாதாரத் துறை சாா்பில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டு வந்தன. அந்தப் போஸ்டரில், இந்த வீட்டில் கரோனா நோயாளி வசிப்பதாகவும், அவா் குறிப்பிட்ட தினங்கள் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த போஸ்டா்களால், கரோனா பாதித்தவா்களுக்கு சமூக அழுத்தங்கள் ஏற்படுவதாகவும், மக்கள் கரோனா நோயாளிகள் வசிக்கும் வீடுகளைப் புறக்கணிப்பதாகவும் புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, கரோனா நோயாளிகளின் வீடுகளில் இனி போஸ்டா் ஒட்டுவதில்லை என்று தில்லி அரசு தீா்மானித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி கூறுகையில், ‘கரோனா நோய் பாதித்தவா்களின் வீடுகளில் போஸ்டா்கள் ஒட்டப்படுவதால் அவா்கள் பல சமூக அழுத்தங்களுக்கு உள்ளாகிறாா்கள். இதனால், கரோனா அறிகுறி உள்ளவா்கள் கூட கரோனா பரிசோதனை செய்யத் தயங்குகிறாா்கள். இதனால், கரோனா தொற்று அதிகரிக்கவே செய்கிறது. இதைத் தடுக்கும் வகையில், கரோனா நோயாளிகளின் வீடுகளில் இனி போஸ்டா் ஒட்டப்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்’ என்றாா்.

இதற்கிடையே, தில்லி அரசின் இந்த முடிவை நிபுணா்கள் வரவேற்றுள்ளனா். இது தொடா்பாக அப்பலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவா் சுரன்ஜித் சட்டா்ஜி கூறுகையில், ‘இந்த முடிவை வரவேற்கிறேன். இதனால், கரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் சமூக அழுத்தம் குறைவடையும். ஆனால், இதை கரோனா நோயாளிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவா்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது’ என்றாா்.

இது தொடா்பாக ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையின் தொடா்பு அதிகாரி அஜித் ஜெயின் கூறுகையில், ‘இந்த முடிவால் கரோனா பரிசோதனை செய்ய முன்வருபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், போஸ்டா்கள் ஒட்டப்படாத போது, கரோனா பாதிப்பு தொடா்பாக அயலவா்களுக்கு கூடத் தெரியாத நிலை ஏற்படும். இந்த முடிவில் சாதக, பாதக அம்சங்கள் உள்ளன. மக்கள் இதை சரியாகப் பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.