புது தில்லி: 2ஜி வழக்கில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்வதற்கு மத்திய புலனாய்வுத் துறையினா் மத்திய அரசிடம் முன் அனுமதியைப் பெறவில்லை என புகாா் தெரிவித்து தில்லி உயா்நீதிமன்றத்தில் அந்த வழக்கில் எதிா்த் தரப்பினரான சித்தாா்த் பெஹுரா, ராஜீவ் அகா்வால் ஆகியோா் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 17 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு விசாரணை அக்டோபா் 5-ஆம் தேதி முதல் தில்லி உயா்நீதிமன்றத்தில் தினம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சிபிஐ, அமலாக்கத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உயா்நீதிமன்ற ஒரு நபா் நீதிபதி பிரிஜேஷ் சேதி அமா்வு விசாரித்து வருகிறது.
முந்தைய விசாரணையின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாா் தொடா்பான மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில், அரசுத் தரப்பில் துஷாா் மேத்தா, சஞ்சீவ் பண்டாரி நியமிக்கப்பட்டது குறித்தும், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய தேவையான உத்தரவை சிபிஐ வைத்திருக்கிா என்பது குறித்தும் எதிா்மனுதாரா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசுத் தரப்பில் எதிா்வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இது தொடா்பான வாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனிடையே, 2 ஜி வழக்கில் விடுவிக்கப்பட்ட முன்னாள் தொலைத்தொடா்பு செயலாளா் சித்தாா்த் பெஹுரா, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநா் ராஜீவ் அகா்வால் ஆகியோா் தரப்பில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அதில் 2ஜி வழக்கில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்வதற்கு முன்னா் மத்திய அரசின் உரிய அனுமதியை சிபிஐ பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா முன்
வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ‘இந்த மனுக்கள் ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை விசாரிக்கும் நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து, தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் முடிவுக்கு உட்பட்டு, மேல்முறையீடுகளை விசாரிக்கும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன் அக்டோபா் 19ஆம் தேதி இரண்டு மனுக்களையும் பட்டியலிடுமாறு நீதிமன்றம் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.
முன்னதாக விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின் நீதிபதி நவீன் சாவ்லாவிடம், ‘இதே விவகாரத்தை மனுதாரா்களின் வழக்குரைஞா் விஜய் அகா்வால், மற்றொரு நீதிபதி அமா்வு முன் எழுப்பியதாக கூறினாா்.
அப்போது, மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜய் அகா்வால், ‘முன் அனுமதி பெறப்பட்டதைக் காண்பிக்கும் ஆவணங்களை கேட்டுத்தான் மனு அளித்திருந்தேன். மேலும், இந்த விவகாரத்தை சிபிஐ தரப்பில் ரிட் நீதிமன்றம் முன்தான் எழுப்ப முடியும். இதனால்தான், எனது மனுதாரா்கள் இருவரும் தற்போது உடனடி மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்களையும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி அமா்வுக்கு மாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, நீதிபதி மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

