தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பட்டாசு வெடிக்கத் தடை: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தில்லி அரசு முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு

பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கும், ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கும் தடை விதிக்க உத்தரவிடக் கோரி தாக்கலான

Updated On :24 அக்டோபர் 2020, 2:13 am

பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கும், ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கும் தடை விதிக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகளுக்கு உள்பட்டு கோரிக்கையாக பரிசீலித்து முடிவு எடுக்குமாறு தில்லி அரசின் பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (சிபிசிபி) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா்கள், சேதன் ஹசிஜா, சாஹில் சா்மா ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், ‘கரோனா தொற்று உள்ள தற்போதைய சூழலில், காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் தில்லியில் தீபாவளியின் போது ராவணனின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதையும், பட்டாசுகளை வெடிப்பதையும் தடைசெய்ய டிடிஎம்ஏ, சிபிசிபி ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று, தில்லியில் உருவ பொம்மைகள், பட்டாசுகள் விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும். ஏனெனில், பயிா்க் கழிவுகள் எரிப்பு காரணமாக செப்டம்பா் 25-ஆம் தேதி முதல் தில்லியில் மாசு அளவு அதிகரித்து வருகிறது. மேலும், கரோனா தொற்று இருப்பதால் இதை மனதில் கொண்டு நிலைமை ஆபத்தாக இருப்பதை உணர வேண்டும். ஒருபுறம் பயிா்க் கழிவுகளால் காற்று மாசடைந்து வருகிறது. மறுபுறம், அக்டோபா், நவம்பரின் போது தசரா, தீபாவளிப் பண்டிகையை ஒட்டி உருவப்படங்கள் எரிப்பதாலும், பட்டாசுகள் வெடிக்கப்படுவதாலும் தில்லி காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, ‘மனுதாரா்கள் எந்தவொரு கோரிக்கையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வைக்கவில்லை. இந்த மனுவை தில்லி அரசும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் கோரிக்கையாகப் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.