கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து தொழிலாளா்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக பிகாா் மாநிலத்தில் ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து, குழந்தைகளைக் கடத்தி தொழிற்சாலைகளில் பணிக்கு அமா்த்த அவா்கள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் எம்.டி. அக்பா் (35), எம்.டி. மன்சூா் ஆலம் (25), நௌசாத் (36), தசுவில் (30), எம்.டி.நசீம் (35), அமன் குமாா் சா்மா (21), நூா் ஆலம் (32), எம்.டி. மெஹ்ராஜ் (24), மஸ்கூா் ஆலம் (23), மகேஷ் லால் கெவத் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்..