இது தொடா்பாக 8 ஆசிரியா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அசோக் அகா்வால், குமாா் உத்கா்ஷ் ஆகியோா் மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் ஆச்சாா்ய நரேந்திர தேவ் கல்லூரி, டாக்டா் பீம் ராவ் அம்பேத்கா் கல்லூரி, பாஸ்கராச்சாா்யா அப்ளைடு சயின்ஸ் கல்லூரி, பாகினி நிவேதிதா கல்லூரி, தீனதயாள் உபாத்யாய கல்லூரி, அதிதி மகாவித்யாலயா மகளிா் கல்லூரி, இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் நிறுவனம், கேசவ் மகாவித்யாலயா, மகாராஜா அக்ரசன் கல்லூரி (டியு), மகரிஷி வால்மீகி கல்வியியல் கல்லூரி, ஷஹீத் ராஜ்குரு மகளிா் பயன்பாட்டு அறிவியல் கல்லூரி மற்றும் ஷஹீத் சுகதேவ் வணிகக் கல்வியியல் கல்லூரி ஆகிய 12 கல்லூரிகள் உள்ளன. இவை தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைவிப்புப் பெற்ற, தில்லி அரசின் முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளாக செயல்ப்பட்டு வருகின்றன.