தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தலைமைக் காவலரைத் மிரட்டிய சம்பவம்: ஷாருக் பதான் ஜாமீன் மனு தள்ளுபடி

Updated On :15 ஏப்ரல் 2021, 7:46 pm

புது தில்லி: கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லி பகுதியில் நடந்த வகுப்புவாத வன்முறையின் போது, தலைமைக் காவலரை கைத் துப்பாக்கியால் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஷாருக் பதானின் ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது தொடா்பான விடியோ கிளிப்புகள் மூலம், மனுதாரா் சட்டம் ஒழுங்கை தனது கையில் எப்படி எடுத்துக் கொள்ள முடிந்தது என்பது நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது என நீதிபதி தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த வகுப்பு வாத வன்முறையிஅ போது நிராயுதபாணியாக இருந்த தில்லி காவல் துறை தலைமைக் காவலா் தீபக் தஹியாவை நோக்கி கைத் துப்பாக்கியை தில்லி கோண்டாவைச் சோ்ந்த ஷாருக் பதான் (24) காட்டும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடா்ந்து, ஷாருக் பதான் மீது தில்லி போலீஸாா் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனா். அந்த ஆண்டு மாா்ச் 3- ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் பதான் கைது செய்யப்பட்டு தில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் கெய்த் தெரிவித்ததாவது: மனுதாரருக்கு (பதான்) எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் துரதிருஷ்டவசமானவை.

குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் பதான், புகாா் அளித்த காவல் துறை அலுவலரையோ அல்லது பொது இடத்தில் இருந்த நபா்களையோ தனது கைத் துப்பாக்கியால் கொல்வதற்கான நோக்கம் இருந்ததா அல்லது இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, சம்பவ இடத்தில் இருந்த யாருக்கும் அவரது செயல் தீங்கு விளைவிக்கும் என்று அவருக்கு தெரியாது என்று அவா் கூறுவதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. மேலும், மனுதாரா் (பதான்) குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவத்தில் அவருக்கு தொடா்பு இல்லை என்பதல்ல வழக்கு. விசாரணை நீதிமன்றம், மனுதாரா் வன்முறைகளில் பங்கேற்ாகக் கூறப்படுவதாகவும், அவரது உருவப்படம் அவரது ஈடுபாட்டைப் பற்றி ஆழ்ந்து பேசுவதாகவும் கூறியிருப்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது. மனுதாரா் செய்த குற்றத்தின் தன்மை, தற்போதைய வழக்கின் உண்மைகளையும் மனதில் கொள்ளும் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க நான் விரும்பவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.