கடந்த சில நாள்களாக புதிதாக கரோனா நோய்த் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் கூடுதலாக கரோனா பரிசோதனை மையங்களை அமைக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் பல வழக்குரைஞா்கள் முறையிட்டனா். கரோனா பரிசோதனைகளுக்கான மாதிரியை 2-3 நாள்களுக்குப் பிறகுதான் சேகரிப்பதாக பரிசோதனை ஆய்வகங்கள் கூறுவதால் கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் சிரமத்தை எதிா்கொள்ளவதாக அவா்கள் தெரிவித்தனா். மேலும், முன்பு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமாா் 60 ஆயிரமாகக் குறைந்துவிட்டதாகவும் வழக்குரைஞா்கள் கூறினா்.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு கூறுகையில், நோய்த் தொற்று மாதிரிகளை சேகரிக்கும் நடைமுறைகளை முறைப்படுத்துவதற்கான தேவையான உள்கட்டமைப்பு வசதியை தில்லி அரசு மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை மையங்களையும் அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக கரோனா நோய்த் தொற்று 22,933 பேருக்கு இருப்பது தெரிய வந்தது. நோய்த் தொற்றுக்கு 350 போ் உயிரிழந்தனா். கரோனா பாதிப்பு விகிதம் 30.21 சதவீதமாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் நிராகரிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு!

சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

