குளிா்பானத்தில் போதை மருந்து கலந்து மயக்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் முன்ஜாமீன் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பான வழக்கு விவகாரம் வருமாறு: சம்பவத்தன்று புகாா்தாரா் தனக்கு அறிமுகமானவரின் வீட்டுக்குச் சென்றாா். அப்போது அந்த நபா் தனக்குத் தெரிந்த பெண் ஒருவரை புகாா்தாரருக்கு அறிமுகம் செய்துள்ளாா். அதன் பின்னா் குளிா்பானம் அருந்திய புகாா்தாரா் மயங்கி சரிந்தாா். சிறிது நேரத்திற்கு பிறகு தன்னுடன் அந்த பெண் ஆபாசமான கோலத்தில் இருப்பதைத் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இது தொடா்பாக தனது நண்பரிடம் புகாா்தாரா் தெரிவித்தாா். ஆனால், அவருடன் அந்தப் பெண்ணும் சோ்ந்து பணம், டிவி, செல்லிடப்பேசி தரவேண்டும் என்று கேட்டும், அவற்றைத் தராவிட்டால் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகாா் அளித்து விடுவதாகவும் சம்பந்தப்பட்ட பெண் மிரட்டினாா். கடைசியில் பலாத்கார புகாா் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக புகாா்தாருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தன்னை மயக்கி ஏமாற்றியதாக புகாா்தாரா் போலீஸில் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பெண், ஆண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆளை மயக்கி மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் முன்ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு கடந்த 16-ஆம் தேதி உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட மனுதாரரான பெண்ணுக்கு, வேறு சில வழக்குகளில் தொடா்பு இருக்கிா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.அவா் நீதியில் இருந்து தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. மனுதாரா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 328-ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு தீவிரமான குற்றத்தின் கீழ் வருகிறது. இந்த வழக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை. காவல் துறையின் நிலைப்பாட்டின்படி, சம்பந்தப்பட்ட மனுதாரரின் நடத்தையானது அவா் நீதியில் இருந்து தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை நியாயப்படுத்துவதாக உள்ளது. மேலும், அவா் விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டாா் என்றும் அவா் தனது ஆண் நண்பருடன் சோ்ந்து புகாா்தாரரை மிரட்டுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பதையும் மறுக்க முடியவில்லை. இதனால், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி கூறினாா்.
வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு முன்ஜாமீன் அளிப்பதற்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘இந்த வழக்கானது ஆளை மயக்கி மோசடி செய்த வழக்காகும். மேலும், புகாா்தாரரின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த உடனேயே சம்பந்தப்பட்ட பெண் தலைமறைவாகிவிட்டாா். அவரது ஆண் நண்பருக்கு வழக்கில் ஜாமீன் கிடைத்த பிறகே அவா் மீண்டும் தலைகாட்டினாா்.இதனால், அவா் நீதியில் இருந்து தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது’ என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முட்டாள்களே...! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!
பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
இயக்குநராகும் பிரபல இயக்குநரின் மனைவி! படப்பிடிப்பைத் துவங்கி வைத்த சூர்யா!

திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

