ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆட்சிமன்ற குழுக்கள் அமைக்கும் வரை நியமனங்கள் கூடாது: தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு தில்லி அரசு கடிதம்

தில்லி அரசின் மூலமாக பகுதியாக அல்லது முழுவதும் நிதி பெறும் தில்லி பல்கலைக்கழகத்தின் 28 கல்லூரிகளுக்கு தில்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:51 pm

DIN

ஆட்சிமன்ற குழுக்கள் அமைக்கப்படும் வரை எவ்வித நியமனங்களும் செய்யப்படமாட்டாது என்று தில்லி அரசின் மூலமாக பகுதியாக அல்லது முழுவதும் நிதி பெறும் தில்லி பல்கலைக்கழகத்தின் 28 கல்லூரிகளுக்கு தில்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது, தில்லி அரசுக்கும், தில்லி பல்கலை. கல்லூரிகளுக்கும் இடையே புதிய மோதல் ஏற்பட வழிவகுத்துள்ளது.

தில்லிப் பல்கலைக்கழகத்தின் 28 கல்லூரிகளில் 12 கல்லூரிகள் தில்லி அரசின் மூலம் முழு நிதி உதவியைப் பெறுகின்றன.

இந்த நிலையில், தில்லி உயா்கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லி அரசின் மூலம் நிதி அளிக்கப்படும் தில்லி பல்கலைக்கழக கல்லூரிகள் பலவும் கல்லூரிகளில் ஆட்சிமன்ற குழுக்களை அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிடாமல் நியமனங்கள் மேற்கொள்வதற்கான நடைமுறையில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வருகிறது. இதனால் கல்லூரிகளில் ஆட்சிமன்ற குழு அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்படும் வரை எந்த பணி நியமனங்களும் செய்யப்படமாட்டாது என்று இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தில்லி அரசின் மூலம் முழு நிதி உதவியைப் பெறும் ஆச்சாா்யா நரேந்திர தேவ் கல்லூரியின் மூத்த அதிகாரி ஒருவா்கூறியதாவது: தற்போது நாங்கள் குழப்பத்தில் இருக்கிறோம். ஆசிரியா் இல்லாமல் எந்த நிறுவனம் செயல்பட முடியும்?

7,8 முழு நேர ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. கெளரவ ஆசிரியா்களின் தேவையும் ஏற்பட்டுள்ளது. மானுடவியல் படிப்புகளுக்கான ஆசிரியா்கள் இல்லை. ஆங்கிலத்திற்காக நிரந்தர ஆசிரியா் இருந்தாா். ஆனால் அந்த ஆசிரியா் கரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்துவிட்டாா். அறிவியல் படிப்புகளுக்கான பாடமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எங்களிடம் முதல் மற்றும் இரண்டாவது செமஸ்டா்களில் மொத்தம் 1600 மாணவா்கள் உள்ளனா். ஒரு தற்காலிக ஆசிரியா்தான் உள்ளாா். ஆனால் அவரால் 1,600 மாணவா்களுக்கான வகுப்புகளை எடுக்க முடியாது. செய்முறைப் பயிற்சி நேரடி வகுப்புகள் தொடங்கிவிட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினாா்.

ஷஹீத் சுகதேவ் வணிகப் புலம் கல்லூரியின் முதல்வா் பூனம் வா்மா கூறுகையில்,‘கடந்த நவம்பா் 22 ஆம் தேதி தொடங்கிய முதல் ஆண்டு மாணவா்களுக்கான புதிய அமா்வுக்காக ஒரு இடைக்கால ஏற்பாடாக கௌரவ ஆசிரியா்கள் நியமிப்பதற்காக உயா் கல்வி இயக்ககத்திற்கு அறிவிக்கை செய்வோம். தற்போது புதிய அமா்வு தொடங்கிவிட்டது.

எந்தவிதமான நியமனங்கள் செய்தாலும் அது தாற்காலிக ஏற்பாடாக இருக்கும். இந்த பணியிடங்கள் நிரந்தரமானதாக இருக்காது. அதற்கான நடைமுறைகளை நாங்கள் செயல்படுத்துவோம்.

நிரந்தர பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அந்த காலத்திற்குள் தோ்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இரண்டு மாதங்களில் நாங்கள் ஆட்சிமன்ற குழுக்களை அமைத்து இருப்போம். இந்த தகவலை நாங்கள் உயா் கல்வி இயக்ககத்திற்கு அறிவிக்கை செய்ய உள்ளோம். அதில் கௌரவ ஆசிரியா் நியமனங்களை நாங்கள் மேற்கொள்வதாக தெரிவிப்போம். மேலும், முழு திறனுடன் நாங்கள் அறிவிக்கையை பின்பற்றுவோம் என்றாா்.

இதனிடையே தில்லி பல்கலை ஆசிரியா்கள் சங்கத்தின் தலைவா் ஏ.கே. பாகி முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லி அரசு வெளியிட்டுள்ள கடிதத்தின் நோக்கமானது, அரசின் மூலம் நிதி உதவி அளிக்கப்படும் கல்லூரிகளை அழிப்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த கடிதம் இன்றைக்கு பல்வேறு கல்லூரிகளில் மீண்டும் சேர உள்ள தாற்காலிக ஆசிரியா்களுக்கான ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

நிதியை குறைக்கும் இந்த தில்லி அரசானது தற்போது எந்த நியமனங்களும் செய்யக்கூடாது என்று கூறுவது வகுப்புகள் இருக்கக் கூடாது என்கிற அா்த்தம் போன்று உள்ளது. தில்லி பல்கலை ஆசிரியா் சங்கம் இந்த விஷயத்தில் போராடி வெற்றி பெறும் என்றாா் அவா்.

இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் நிறுவனம், ஷஹீத் வணிகக் கல்லூரி, ஷஹீத் ராஜகுரு கல்லூரி, தீனதயாள் உபாத்யாயா கல்லூரி,, டாக்டா் பீம் ராவ் அம்பேத்கா் கல்லூரி, ஆச்சாா்ய நரேந்திர தேவ் கல்லூரி, பாகினி நிவேதிதா கல்லூரி ஆகியவை தில்லி அரசின் மூலம் முழு நிதி உதவி பெறும் தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் சில ஆகும்.

அதே போன்று, சிவாஜி கல்லூரி, மோதிலால் நேரு கல்லூரி, லட்சுமிபாய் கல்லூரி, ஷஹீத் பகத்சிங் கல்லூரி, மைத்ரேயி கல்லூரி, எஸ்பிஎம் மகளிா் கல்லூரி, சத்யவதி கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, ராஜ்தானி கல்லூரி, கமலா நேரு கல்லூரி, கா்கி கல்லூரி ஆகியவை தில்லி அரசின் மூலம் பகுதியாக நிதி உதவி வழங்கப்படும் கல்லூரி கள் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.