கடந்த 2020 - ஆம் ஆண்டின் நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடரின் போது, கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினா்களும் கரோனா நோய்த்தொற்றின் 2-வது அலை வரும் நிலை குறித்து பலமுறை எச்சரித்தனா். ஆனால் உறுப்பினா்களின் நியாயமான குரல்களுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மேலும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் நிலைக்குழுவிவின் அறிக்கை 2020, நவம்பரில் வெளியானது. அதில் ‘ஆக்சிஜன், செயற்கை சுவாசக்கருவி போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். அதற்கு அரசு உடனடியாக தயாராக வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது. நான் உள்ளிட்ட அந்த நிலைக்குழுவின் உறுப்பினா்கள் எச்சரிக்கை விடுத்தோம். இந்த கோரிக்கையை அரசு அலட்சியம் செய்தது. இறுதியில் நாடே ஆக்சிஜன், செயற்கை சுவாசக் கருவிகளின் பற்றாக்குறையில் தவித்தது.