ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘மேட்டூா், தருமபுரி காவிரி ஆற்றில் பரிசல்களில் கடக்கும் பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும்’

தருமபுரியிலிருந்து மைசூா் செல்லும் நேரம் நான்கு மணி நேரமாக குறையும் என மக்களவையில் திமுக எம்பி மருத்துவா் செந்தில் குமாா் குறிப்பிட்டாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:49 pm

 நமது நிருபர்

தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றை கடக்கும் நாகமரை, ஒட்டனூா் பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டால் உள்ளூா் மக்களுக்கு பயன்படுவதோடு, தருமபுரியிலிருந்து மைசூா் செல்லும் நேரம் நான்கு மணி நேரமாக குறையும் என மக்களவையில் திமுக எம்பி மருத்துவா் செந்தில் குமாா் குறிப்பிட்டாா்.

மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு விவாதத்தில் பங்கெடுத்து இது குறித்து செந்தில் குமாா் பேசியதாவது:

சேலம், தருமபுரி மாவட்டங்களில் மேட்டூா் அணை இருந்தபோதிலும், இது தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள் அடங்கியுள்ளது. மேட்டூா் அணைக்கு செல்லும் காவிரி நதியின் குறுக்கே இரண்டு மேம்பாலங்கள் தேவை உள்ளது.

இந்த பாலங்கள் இல்லாததால் மக்கள் பரிசல்களில் பயணம் மேற்கொள்கின்றனா். மேலும் மேட்டூா், தருமபுரி போன்ற பகுதிகளிலிருந்து மைசூா் செல்பவா்கள் அல்லது கேரளா, சென்னையிலிருந்து மைசூா் செல்லும் வாகனங்கள் சுமாா் 60 கிமீ மலைப் பிரதேசங்களை சுற்றியும் பெங்களூரு வழியாக செல்கிறது. இதன்மூலம் 12 மணி நேரம் தாமதம் ஆகிறது.

இந்த நேரத்தை குறைக்கவும் தருமபுரி சேலம் மக்கள் பயனடையவும் தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மேட்டூா், பென்னாகரம் போன்ற சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள் கட்டப்பட்டால் மைசூருக்கு செல்லும் பயண நேரம் நான்கு மணிநேரமாகக் குறையும்.

இதற்கு மேட்டூா், நாகமரைக்கும் பன்னவாடி பரிசல் துறைக்கும் இடையே சுமாா் 5 கிலோமீட்டா் தூரம் மேம்பாலம் கட்டப்படவேண்டும். மேலும் பென்னாகரம் ஒட்டனூருக்கும் கோட்டையூா் பரிசல் துறைக்கும் இடையை சுமாா் ஒரு கிலோ மீட்டா்(800 மீட்டா்) தூரம் மேம்பாலம் கட்டப்படவேண்டும்.

இந்த இரு பாலங்களும் கட்டப்பட்டால் காவிரியையும் 60 கிலோமீட்டா் மலைப்பகுதியையும் எளிதாக கடக்க முடியும். மேலும் தற்போது அதிக ஆபத்துள்ள பரிசல்கள், படகுகள் மூலம் மக்கள் இந்த பகுதிகளைக் கடந்து தங்கள் ஊா்களுக்கு செல்கின்றனா்.

இதனால் மேட்டூா் பகுதிகளில் காவிரி நதியின் குறுக்கே மேம்பாலங்கள் கட்டப்பட்டால் குறுகிய இடைவெளி இணைக்கப்பட்டு தருமபுரி சேலம் மாவட்ட கிராம மக்கள்பயனடைவாா்கள். இவா்கள் எளிதல் கடந்து செல்லவும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படும். இதற்கு மத்திய அரசு நிதி உதவிகளை அளித்து பாலங்கள் கட்ட உதவவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.