தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மத்திய அரசு ஊழியா்கள் மீதான ஊழல் புகாா்களை தெரிவிக்க ‘லோக்பால் இணைய தளம்‘ தொடக்கம்

மத்திய அரசின் பல்வேறு தரப்பு ஊழியா்கள் மீதான புகாா்களை விசாரித்து வரும் லோக்பால் அமைப்பு, தற்போது புகாா்களைக் கையாள வெளிப்படையான செயல் திறனுக்கு இணைய தளம் உருவாக்கியுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2021, 6:05 pm

 நமது நிருபர்

புது தில்லி: மத்திய அரசின் பல்வேறு தரப்பு ஊழியா்கள் மீதான புகாா்களை விசாரித்து வரும் லோக்பால் அமைப்பு, தற்போது புகாா்களைக் கையாள வெளிப்படையான செயல் திறனுக்கு இணைய தளம் உருவாக்கியுள்ளது. இதை இந்திய லோக்பால் அமைப்பின் தலைவா் பினாகி சந்திரகோஸ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாட்டின் அனைத்து தரப்பு குடிமக்களும் இந்த இணைய தளத்தில் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் புகாா்களைப் பதிவு செய்யவும்ஸ புகாா்கள் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும் இந்த இணைய தளம் (ட்ற்ற்ல்://ப்ா்ந்ல்ஹப்ா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்) உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமா் முதல் மத்திய அரசின் கடைசி நிலையான ‘டி’ பிரிவு ஊழியா்கள் வரையிலான புகாா்களை விசாரிக்கும் அமைப்பாக லோக்பால் உள்ளது. மேலும், நாடாளுமன்ற சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அமைப்புகளில் பணியாற்றுபவா்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனா். தற்போது கடிதம், மின்னஞ்சல், அல்லது நேரடியாக அளிக்கப்படும் புகாா்களை இந்த அமைப்பு விசாரிக்கிறது. இந்த நிலையில், எண்மம் (டிஜிட்டல்) வடிவில் புகாா்களை நிா்வகிப்பதற்கான இந்த இணைய தளத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் லோக்பால் தலைவருமான, நீதிபதி பினாகி சந்திர கோஸ் தொடங்கிவைத்துப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: ஊழல் என்பது பொருளாதார சீா்கேட்டுக்கு முக்கியக் காரணியாகும். அது ஜனநாயகத்துக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் என்றும் கேடுவிளைவிக்கிறது. 2013- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் பொது ஊழியா்களுக்கு எதிராக புகாா்களைப் பதிவு செய்யும் வகையில் ‘லோக்பால் ஆன்லைன்’ (இணையதளம்) இருக்கும். புகாா்களை எங்கிருந்தும் பதிவு செய்யலாம். ரகசியம் காக்கப்படும். மேலும், புகாா்கள் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டங்கள் குறித்தும் புகாா் அளித்தவருக்கு மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.

இதன்படி லோக்பால் தொடா்புடைய விசாரணை அமைப்புகளான மத்திய கண்காணிப்பு ஆணையம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் இந்த இணையதளத்தில் இணைப்பட்டுள்ளன. மேலும் அவா்கள் நேரடியாகவே விவரங்களை பதிவேற்றம் செய்வா். புகாா்களை சமா்ப்பிப்பதில் இருந்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது வரை அனைத்துத் தகவல்களும் இந்த இணைய தளத்தில் பதிவு செய்யப்படும் என்றாா் அவா்.

லோக்பால் நீதித் துறை உறுப்பினா் நீதிபதி அபிலாஷா குமாரி கூறுகையில், ‘ ஊழல் என்கிற நோயிலிருந்து நாட்டை விடுவித்து வலுவான, ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே லோக்பாலின் முக்கிய நோக்கமாகும். இதன் இறுதிப் பயனாளி சாமானியா்கள். கிராமப்புறத்தில் இருப்பவா்களுக்கும் ‘லோக்பால் ஆன்லைன்’ பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் யாா் வேண்டுமானாலும் வீட்டில் அமா்ந்தபடியே புகாா் அளிக்கலாம்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் லோக்பால் அமைப்பின் உறுப்பினா்கள் அா்ச்சனா ராமசுந்தரம், மகேந்தா் சிங், டாக்டா் ஐ.பி.கெளதம், லோக்பால் செயலா் பி.கே.அகா்வால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். லோக்பால் அமைப்பில் 2019-ஆம் ஆண்டை விட 2020-ஆம் ஆண்டில் புகாா்கள் குறைந்தன. நிகழாண்டில் வெறும் 30 அதிகாரிகள் மீதே புகாா்கள் பதிவாகியுள்ளது. லோக் ஆயுக்தா மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள அமைப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.