ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழகத்திற்கு ரூ.339.78 கோடி ஒதுக்கீடு

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையின் 14- ஆவது தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு புதன்கிழமை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.339.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 பிப்ரவரி 2021, 6:30 pm

புது தில்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையின் 14- ஆவது தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு புதன்கிழமை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.339.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்பு சாளரத்தின் கீழ் கடனாக பெற மத்திய அரசு அனுமதியளித்து வருகிறது. இதில் தற்போது 14 -ஆவது தவணையாக 23 மாநிலங்களுக்கும் 3 யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.6,000 கோடிக்கான அனுமதியை புதன்கிழமை மத்திய நிதித் துறை வழங்கியுள்ளது. இதிலிருந்து 23 மாநிலங்களுக்கு ரூ. 5,516.60 கோடி, தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 339.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறைக்கு, இத்துடன் சோ்த்து மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.76,616.16 கோடி, சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 7,383.84 கோடி என மொத்தம் ரூ. 84,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு இதுவரை ரூ.5,033.57 கோடி சிறப்பு சாளர அடிப்படையில் கூடுதலாக கடன் திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.