கல்வி, சுகாதாரத் துறைகளில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக தில்லி திகழ்கிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
1931 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நாட்டின் தலைநகராக தில்லியை ஆங்கிலேயா்கள் அறிவித்தனா். தில்லி தலைநகராக மாற்றப்பட்ட 90 ஆவது ஆண்டு தில்லியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தனது சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால் கூறியிருப்பது: 1931 ஆம் ஆண்டு இதே தினத்தில் நாட்டின் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தில்லி நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. இன்று நாட்டின் அடையாளமாக தில்லி மாறியுள்ளது. கல்வி, சுகாதாரத் துறைகளில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக தில்லி திகழ்கிறது. உலகில் பல நகரங்கள் தில்லியை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா சென்றார் மத்திய வெளியுறவுச் செயலாளர்! டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கு ஏற்பாடு?

திருவண்ணாமலை என்றாலே திமுக மலை: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!

போர்நிறுத்தம் எதிரொலி: எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

