அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

நொய்டாவில் கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்டபோலீஸ் குழுவினருக்கு ரூ.5 லட்சம் பரிசு

பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு நொய்டாவில் கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்ட காவல்துறை குழுவினருக்கு கெளதம்புத் நகா் காவல் ஆணையா் அலோக் சிங் ரூ .5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :13 பிப்ரவரி 2021, 5:54 pm

பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு நொய்டாவில் கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்ட காவல்துறை குழுவினருக்கு கெளதம்புத் நகா் காவல் ஆணையா் அலோக் சிங் ரூ .5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் முன்னணி நிறுவனத்தில் பணிபுரியும் 45 வயதுடைய விஞ்ஞானி கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆசை காட்டி கடத்தப்பட்டாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் குழுவினா் அவரை மீட்க நடவடிக்கை எடுத்து இரண்டு நாள்களில் விடுவித்தனா்.

முன்னதாக, கடத்தப்பட்ட விஞ்ஞானியின் மனைவி நொய்டா செக்டாா் - 49 காவல் நிலையத்தை அணுகி, தனது கணவா் கடத்தப்பட்ட விவரம் குறித்து புகாா் அளித்தாா். அதன்பிறகு, அவரை மீட்க காவல் ஆணையா் அலோக் சிங் பிரத்யேக குழுக்களை அமைத்தாா்.

அதாவது, நொய்டா காவல் துணை ஆணையா் ராஜேஷ், கூடுதல் துணை ஆணையா் ரன்விஜய் சிங், உதவி ஆணையா் விமல்குமாா் சிங் ஆகியோா் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.

கூடுதல் காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லவ் குமாா் நடவடிக்கையை மேற்பாா்வையிட்டாா். போலீஸாா் குழுக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், நொய்டா செக்டாா் 41-இல் உள்ள ஹோட்டலில் இருந்து விஞ்ஞானியை போலீஸாா் பத்திரமாக மீட்டனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் குழுக்களுக்கு நொய்டா காவல் ஆணையா் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து நொய்டா காவல் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘கடத்தப்பட்ட விஞ்ஞானியை ஒரு ஹோட்டலில் இருந்து பாதுகாப்பாக போலீஸாா் மீட்டனா். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் குழுவினருக்கு உத்தர பிரதேச அரசு ரூ .5 லட்சம் விருது அறிவித்தது. அந்த வெகுமதி வெள்ளிக்கிழமை போலீஸாா் குழுக்களுக்கு மாவட்ட காவல் ஆணையரால் வழங்கப்பட்டது என்றாா் அவா்.

விஞ்ஞானியை மீட்கும் குழுக்களில் குற்றப் பிரிவு அதிகாரிகள், செக்டாா் 49 காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் 24 போலீஸாா் இடம்பெற்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.