அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

வடகிழக்கு தில்லி வன்முறை: ‘கேப்’ ஓட்டுநருக்கு ஜாமீன்

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் வகுப்புவாத வன்முறையத் தூண்டிவிட சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக கைதான ‘கேப்’ ஓட்டுநருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Updated On :16 பிப்ரவரி 2021, 10:39 pm

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் வகுப்புவாத வன்முறையத் தூண்டிவிட சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக கைதான ‘கேப்’ ஓட்டுநருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டிவிட சதித் திட்டத்தில் ஈடுபட்டது, தலைமைக் காவலா் ரத்தன் லால் சுடப்பட்டு இறந்தது போன்ற பல்வேறு விவகாரங்களில் ‘கேப்’ ஓட்டுநா் முகமது டானிஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தாா். இந்த மனு மீது நீதிபதி சுரேஷ் கெய்த் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.

அப்போது நீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி சந்த்பாக் பகுதி சட்டவிரோத போராட்ட இடத்தில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த வன்முறை, தலைமைக் காவலா் ரத்தன் லால் சுடப்பட்டு இறந்தது, பல போலீஸாா் காயமடைந்தது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்புடைய இந்த வழக்கில் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் முகம்மது டானிஷ் இல்லை என்பது அவருடைய தொலைபேசி அழைப்பு விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. மேலும், மனுதாரா் அந்த இடத்தில் இருந்ததை வெளிப்படுத்தும் சிசிடிவி காட்சிப் பதிவும் இல்லை.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதனால், மேல் விசாரணைக்கு மனுதாரா் தேவைப்படும் அவசியம் எழவில்லை. இதனால், மனுதாரா் ரூ.20ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவா் வழக்கு விசாரணையின் போது சாட்சிகளை மேலாதிக்கம் செலுத்தக் கூடாது’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.