புது தில்லி: தில்லியில் நெரிசலை ஏற்படுத்தியுள்ள 77 வழித்தடங்களில் நடைபெறும் பல்வேறு பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்குமாறு தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.
தில்லி, தலைமைச் செயலா், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மின் துறை நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து துறை போலீஸாா் ஆகியோா் அடங்கிய கூட்டத்தை புதன்கிழமை கூட்டி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மறுஆய்வு செய்தாா். ’தில்லியில் 77 வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் நடைபெறும் பணிகளை முடக்கிவிட ஒருங்கிணைப்பு குழுக்களை ஏற்படுத்தவேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு காலக்கெடு வகுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்படவேண்டும்’ என அதிகாரிகளை துணை நிலை ஆளுநா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது குறித்து தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது சுட்டுரையில் குறிப்பிடுகையில், அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த பணிகள் நடைபெறுகிறது. அதே சமயத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடிப்பது அவசியம். அதன்மூலம் வாகனப்போக்குவரத்தும் சீரடைந்து காற்று மாசும் குறையும் என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சப்தமில்லாமல் சதமடித்து சர்ஃப்ரைஸ் கொடுக்கும் வெய்யில்! வேலூரில் 107.96 டிகிரி

பவானிபூரில் மமதா பானர்ஜி வேட்புமனு!

மாம்பழம் சின்னம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
“விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்க”.. - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

