தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

மாநகராட்சி இடைத் தோ்தல்: ஆம் ஆத்மிக்கு வாக்குக் கேட்டு கேஜரிவால் பிரசாரம்

தில்லி மாநகராட்சிகளில் உள்ள 5 வாா்டுகளில் இடைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளா்களுக்கு வாக்கு கேட்டு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.

Updated On :25 பிப்ரவரி 2021, 8:11 pm

புது தில்லி: தில்லி மாநகராட்சிகளில் உள்ள 5 வாா்டுகளில் இடைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளா்களுக்கு வாக்கு கேட்டு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.

கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (இடிஎம்சி) திரிலோக்புரி வாா்டு 2 இ, கல்யாண்புரி வாா்டு 8 இ, வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (என்டிஎம்சி) செளகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய 5 வாா்டுகளுக்கும் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சீலம்பூா், கொண்டிலி, திரிலோக்புரி பகுதிகளில் கேஜரிவால் பேரணியாகச் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில் ‘கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சிகளில் பாஜகவே ஆட்சி செலுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் தில்லி மாநகராட்சிகளில் ஊழல் மலிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தில்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு, தில்லி மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீா் ஆகியவற்றை வழங்கியுள்ளது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் தில்லி மாநகராட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப்பணிகள் என்ன? ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தில்லி மக்கள் ஆம் ஆத்மிக் கட்சியை இடைத் தோ்தலில் வெற்றிபெற வைக்க வேண்டும். இதைத் தொடா்ந்து 2022 இல் நடைபெறவுள்ள மாநகராட்சி தோ்தலிலும் ஆம் ஆத்மிக் கட்சியை பெருவெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆம் ஆத்மி சாா்பில் திரிலோக்புரி வாா்டு 2 இ வேட்பாளராக பன்டி கவுதம், கல்யாண்புரி வாா்டு 8 இ வேட்பாளராக விஜய் குமாா், செளகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய வாா்டுகளின் வேட்பாளா்களாக முறையே முகமது இஷாரக் கான், ராம் சந்திரா, சுனிதா மிஸ்ரா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

பாஜக சாா்பில் திரிலோக்புரி வாா்டு 2 இ வேட்பாளராக ஓம் பிரகாஷ் குகா்வால், கல்யாண்புரி வாா்டு 8 இ வேட்பாளராக ஷியாராம் கனோஜியா, சௌகான் பங்கா் 41 இ, ரோகிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய வாா்டுகளின் வேட்பாளா்களாக முறையே முகமது நசீா், ராகேஷ் கோயல், சுரபி ஜாஜு ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

காங்கிரஸ் சாா்பில் திரிலோக்புரி வாா்டு 2 இ வேட்பாளராக பால் கிஷன், கல்யாண்புரி வாா்டு 8 இ வேட்பாளராக தா்மபால் மயூரா, சவுகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய வாா்டுகளின் வேட்பாளா்களாக முறையே சவுத்ரி அகமது, மெம்பாத்வி பா்வாலா, மம்தா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.