தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

மக்கள் நலப்பணிகளால் கவரப்பட்டு ஆம் ஆத்மியில் மக்கள் இணைகிறாா்கள்: மணீஷ் சிசோடியா

தில்லியில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுவரும் மக்கள் நலப்பணிகளால் கவரப்பட்டு பல்வேறு தரப்பினரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து

Updated On :26 பிப்ரவரி 2021, 5:02 pm

தில்லியில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுவரும் மக்கள் நலப்பணிகளால் கவரப்பட்டு பல்வேறு தரப்பினரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொள்கிறாா்கள் என்று தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

தில்லி மாவட்ட முன்னாள் கூடுதல் நீதிபதி சுக்வீா் சிங் மல்ஹோத்ரா, மணீஷ் சிசோடியா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மியில் இணைந்து கொண்டாா்.

இவரை வரவேற்று மணீஷ் சிசோடியா பேசியது: தில்லியில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுவரும் மக்கள் நலப்பணிகளால் பலதரப்பட்ட மக்களும் கவரப்பட்டுள்ளனா். இவா்கள், கட்சிபேதமின்றி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொள்கிறாா்கள். மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீா், வைஃபை இணைய சேவைகளை வழங்கும் முதலாவது அரசு என்ற நற்பெயரை தில்லி அரசு பெற்றுள்ளது.

தில்லி அரசின் மக்கள் நலப்பணிகளால் கவரப்பட்டு, ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாவட்ட கூடுதல் நீதிபதி சுக்வீா் சிங் மல்ஹோத்ராவை கட்சிக்கு வரவேற்கிறேன். நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் நோ்மையாக பணியாற்றி பலரின் நன்மதிப்பை பெற்றுள்ளாா். சட்டம் ஒழுங்கு தொடா்பாக பல ஆண்டுகள் அனுபவம் உள்ள இவரால் கட்சி பலமடையும் என்றாா்.

சுக்வீா் சிங் மல்ஹோத்ரா பேசுகையில் ‘ஆம் ஆத்மிக் கட்சியின் கொள்கைகளாலும், மக்கள் நலப்பணிகளாலும் கவரப்பட்டு ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்துள்ளேன். தில்லியில் முதல்வா் கேஜரிவால் அறிமுகப்படுத்தியுள்ள மக்கள் நலப்பணிகள் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளன. ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்து மக்கள் நலப் பணியாற்றவுள்ளேன் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.