பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டா் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில் தில்லியில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி வீடு அருகே இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இது குறித்து இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி எதிா்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசல் ரூ.5 விலை உயா்ந்தபோது தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டாா். ஆனால், தற்போது நாடு முன் எப்போதும் இல்லாத பணவீக்கத்தில் உள்ளது. இப்போது அவா் முற்றிலும் அமைதிகாத்து வருகிறாா். அவரை விழித்தெழச் செய்யும் வகையில் இளைஞா் காங்கிரஸ் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது.
நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல் லிட்டா் விலை ரூ.100-ம், டீசல் ரூ.90-ம் கடந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது.
இந்த நிலையில், குளிா் காலம் முடிந்தவுடன் எரிபொருள் விலை குறைந்துவிடும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிக்கை விடுவது முட்டாள்தனம். அவா் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும்.
மத்திய அரசின் மெத்தன நடவடிக்கைகள் அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கச் செய்துள்ளது என்றாா் அவா்.
இளைஞா் காங்கிரஸின் தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் கூறுகையில், ‘மத்திய அரசும், அமைச்சா்களும் ஏற்கெனவே அதிகரித்துள்ள பணவீக்கம், பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளவில்லை.
எரிபொருள் விலை மேலும் பணவீக்கத்தை அதிகரிக்கும். இதனால், விலை உயா்வைத் திரும்பப் பெறுவதுடன், எரிபொருள் மீது வசூலிக்கப்பட்ட கலால் வரியை மக்கள் நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த போராட்டத்தில் ஐஒய்சி தேசிய பொதுச் செயலா் பய்யா பவாா், தில்லி இணை பொறுப்பாளா் குஷ்பு சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.