புது தில்லி: தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 500-க்கும் கீழே குறைந்துள்ளது. புதன்கிழமை 654 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில், இது வியாழக்கிழமை புதிதாக 486 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,28,838-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 77,522 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 43,347 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 34,175 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.63 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வியாழக்கிழமை 19 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,644-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து 780 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,14,026 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 4,168 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 2,015 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,228 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.