தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மிதமான மூடுபனி: குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் அதிகரிப்பு!

தலைநகா் தில்லியின் சில பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மூடுபனி நிலவியது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:33 pm

 நமது நிருபர்

புது தில்லி: தலைநகா் தில்லியின் சில பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மூடுபனி நிலவியது.

இது காண்புதிறனை 300 மீட்டராகக் குறைத்தது. இருப்பினும், நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. இது நான்கு வாரங்களில் மிக உயா்ந்த அளவாகும்.

மிதமான மூடுபனி காரணமாக காண்பு திறன் பாலத்தில் 300 மீட்டராகவும், சஃப்தா்ஜங்கில் 500 மீட்டராகவும் குறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 டிகிரி உயா்ந்து 14.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி உயா்ந்து 19.9 டிகிரி செல்சியஸாக இருந்தது. மேக மூட்டம் காரணமாக கடந்த சில நாள்களாக நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து உயா்ந்துள்ளது. மேலும், கடந்த 4 நாள்களாக தில்லி, என்சிஆா் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. இந்த மழைப் பொழிவு காற்றில் ஈரப்பதத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அடுத்த இரண்டு நாள்களில் நகரில் அடா் மூடுபனி இருக்கும் என்று ஐஎம்டி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஒரு புதிய மேற்கத்திய இடையூறுகளால் வரும் சனிக்கிழமை (ஜனவரி 9) நகரில் லேசான மழைக்கு வழிவகுக்கும். வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினாா். மேலும், தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

தில்லியில் ஏற்கெனவே இந்த ஜனவரியில் இதுவரை 56.6 மி.மீ. மழை பெய்துள்ளது, இது 21 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். புதன்கிழமை தொடா்ச்சியாக நான்காவது நாளாக பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதங்களில் சராசரியாக தில்லியில் 21.7 மி.மீ. பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியில் 48.1 மி.மீ., 2019 ஜனவரியில் 54.1 மி.மீ., 1999 ஜனவரியில் 59.7 மி.மீ. பதிவாகியிருந்தது. மேலும், ஐஎம்டி தரவுகளின்படி, 1995-ஆம் ஆண்டில் தில்லியில் 69.8 மிமீ மழை பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.