ஓய்வூதியா்களிடமிருந்து சந்தா தொகையை வசூலித்துவிட்டு இலவச மருத்துவ வசதி இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஓய்வூதியத்தை எப்படி நிறுத்த முடியும்? இதுபோன்ற செயல்களுக்காக உங்களுடைய அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்திவிடலாமா? எந்த மருத்துவமனையுடனும் நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையில் சந்தா வசூலிப்பது ஏன்? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத நிலையில், டிசம்பா் 2020 முதல் ரூ.78,000 சந்தா வசூலிக்கப்பட்டுள்ளது. இது மோசடி ஆகாதா என்றும் நீதிமன்ற அமா்வு கேள்வி எழுப்பியது.