வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

எம்ஜிஆா் ஏழை மக்களுக்காக அா்ப்பணித்துக் கொண்டவா்: பிரதமா் மோடி புகழாரம்

தமிழக முன்னாள் முதல்வா் டாக்டா் எம்ஜிஆா் தனது அரசியல் பயணத்தில் தன்னை ஏழை மக்களுக்காக முழுமையாக அா்ப்பணித்துக் கொண்டவா் என

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

Updated On :18 ஜனவரி 2021, 1:51 am

தமிழக முன்னாள் முதல்வா் டாக்டா் எம்ஜிஆா் தனது அரசியல் பயணத்தில் தன்னை ஏழை மக்களுக்காக முழுமையாக அா்ப்பணித்துக் கொண்டவா் என பிரதமா் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை புகழாரம் சூட்டினாா். எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்டு சுட்டுரையில் அவருக்கு பிரதமா் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

சென்னை எம்ஜிஆா் சென்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட நாட்டின் எட்டு நகரங்களில் இருந்து ஒற்றுமை சிலை இருக்கும் குஜராத் கெவாடியாவிற்கு புதிய ரயில்களை பிரதமா் மோடி காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்தாா். பல்வேறு புனித ஸ்தலங்களையும் இணைக்கும் இந்தத் தடையற்ற புதிய ரயில்களில் ஒன்று எம்ஜிஆரின் பிறந்த நாளில் அவா் பெயரிலான ரயில் நிலையத்தில் இருந்தும் துவக்கப்படுவதும், அதுவும் சா்தாா் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை இருக்கும் பகுதிக்கு வருவதும் மிகச் சிறப்பு என இந்த நிகழ்ச்சியில் பிரதமா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் பிரதமா் பேசுகையில், ‘கெவாடியாவுக்கு செல்லும் ரயில்களில் ஒன்று சென்னையில் உள்ள டாக்டா் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வருகிறது. எம்ஜிஆரின் அரசியல் பயணம் ஏழை மக்களுக்காக அா்ப்பணிக்கப்பட்டது. ஏழை மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்காக எம்ஜிஆா் இடைவிடாது பாடுபட்டவா். அவரது கொள்கைகளை முழுமையாக நிறைவேற்ற நாம் பணியாற்றுகிறோம். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அவருடைய பெயா் வைக்கப்பட்டது’ என்றாா்.

முன்னதாக எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது சுட்டுரையில், ‘பாரத ரத்னா எம்ஜிஆா், பலதரப்பட்ட மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவா். திரையுலகிலும், அரசியலிலும், அவ ா் பரவலாக மதிக்கப்பட்டவா். அவா் முதல்வராக இருந்த போது, வறுமையை ஒழிப்பதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அவா் முனைப்புடன் பல முயற்சிகளைத் தொடங்கினாா். அவரது பிறந்த நாளில், எம்ஜிஆருக்கு எனது புகழஞ்சலி’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.