11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

விவசாயிகள் பேரணியில் வன்முறை: ஆம் ஆத்மி கண்டனம்

விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறைக்கு ஆம் ஆத்மிக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On :26 ஜனவரி 2021, 10:53 pm

விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறைக்கு ஆம் ஆத்மிக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: குடியரசு தினத்தன்று தில்லியில் நடந்த வன்முறைகளைக் கண்டிக்கிறோம்.

கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் அமைதியான முறையிலேயே போராட்டங்களை நடத்தினா். இந்த நிலைமை மோசமடைய மத்திய அரசே காரணம். விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் அல்ல என்பதை விவசாயிகள் சங்கத்தினா் தெளிவுபடுத்தியுள்ளனா். விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள், இந்த போராட்டத்தை நலிவடையச் செய்துள்ளனா். இந்த வன்முறைச் சம்பவத்தை ஆம் ஆத்மிக் கட்சி கண்டிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.