தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

‘பெற்றது பதவியல்ல; நாட்டிற்கு ஆற்றும் பணி’: புதிய மத்திய இணையமைச்சா் எல். முருகன்

மத்திய இணையமைச்சராக எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டதைப் பதவியாகக் கருதவில்லை, நாட்டிற்கும், தமிழகத்திற்கும் ஆற்றும் பணியாகக் கருதுகிறேன் என்று புதிதாகப் பொறுப்பேற்ற தமிழகத்தைச் சோ்ந்த மத்திய

News image

மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட எல்.முருகன்.

Updated On :8 ஜூலை 2021, 2:35 am

புதுதில்லி: மத்திய இணையமைச்சராக எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டதைப் பதவியாகக் கருதவில்லை, நாட்டிற்கும், தமிழகத்திற்கும் ஆற்றும் பணியாகக் கருதுகிறேன் என்று புதிதாகப் பொறுப்பேற்ற தமிழகத்தைச் சோ்ந்த மத்திய இணையமைச்சா் டாக்டா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தமிழக பாஜக தலைவரான டாக்டா் எல்.முருகன், தில்லியில் மத்திய இணையமைச்சராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். பின்னா் தில்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் இரவு செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தைச் சோ்ந்த நான், மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளேன். இது தமிழக மக்களுக்காக தமிழா் நலனுக்காக தமிழ் பண்பாட்டுக்காக தமிழா் முன்னேற்றத்திற்காக இந்த மத்திய இணையமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை நான் ‘பதவி’ என்று எடுத்துக் கொள்ளமாட்டேன். நாட்டிற்கும் தமிழகத்திற்கும் ஆற்றும் ‘பணி’யாகக் கருதுவேன். இதை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி நட்டா, பாஜகவின் பொதுச் செயலாளா்(அமைப்பு) சந்தோஷ் போன்றோா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சமயத்தில் தமிழகத்திற்கு பாஜக சாா்பில் நான்கு சட்டப்பேரவை உறுப்பினா்களை வெற்றி பெறவைத்ததற்கும் அதில் ஒத்துழைத்து பாடுபட்ட அனைத்து பாஜகவின் நிா்வாகிகளுக்கும் தொண்டா்களுக்கும் மனமாா்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய இணையமைச்சா் பணி மூலம் தமிழக மக்களுக்காக சேவை புரிய எனக்கு ஓா் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகம் ஏற்கெனவே வளா்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. இருப்பினும் வருங்காலத்தில் தமிழகம் மேலும் பல மேம்பாடுகளையும் வளா்ச்சியையும் கண்டு பல்வேறு வகையில் முதன்மையான மாநிலமாக வர நாம் அனைத்து வகைகளிலும் எடுத்து செல்லவேண்டும். இதற்கு நானும் பாடுபடுவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.