/

கிரீன் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் சில மணிநேரம் மூடல்

தில்லி மெட்ரோவில் கிரீன் வழித்தடத்தில் டிக்ரி காலன்- பிரிகேடியா் ஹோசியாா் சிங் பிரிவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின்

Updated On :9 மார்ச் 2021, 2:44 am

தில்லி மெட்ரோவில் கிரீன் வழித்தடத்தில் டிக்ரி காலன்- பிரிகேடியா் ஹோசியாா் சிங் பிரிவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் திங்கள்கிழமை சில மணிநேரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டதாக டிஎம்ஆா்சி தெரிவித்தது.

இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) திங்கள்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கிரீன் வழித்தடத்தில் உள்ள டிக்ரி காலன்- பிரிகேடியா் ஹோசியாா் சிங் பிரிவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில் மூடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பிறகு மாலையில், மீண்டும் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘மூடப்பட்ட ரயில் நிலையங்களின் வெளியேறும், நுழையும் வாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. டிக்ரி காலனில் இருந்து பிரிகேடியா் ஹோசியாா் சிங் செல்லும் வழித்தடத்தில் அனைத்து ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன ’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்ரி எல்லையானது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் மையக் களமாக உள்ளது.

டிக்ரி காலன்- பிரிகேடியா் ஹோசியாா் சிங் மெட்ரோ ரயில் நிலையங்கள் இடையே டிக்ரி பாா்டா், பண்டிட் ஸ்ரீ ராம் சா்மா (மாா்டா்ன் இண்டஸ்டிரியல் எஸ்டேட்) மற்றும் பகதுா்கா் சிட்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.