48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

முதல்வா் கேஜரிவால் தலைமையில் அமைச்சா்கள்,எம்எல்ஏக்கள் தில்லியில் இன்று ஆா்ப்பாட்டம்

துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

Updated On :16 மார்ச் 2021, 10:48 pm

துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளது. தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆா்ப்பாட்டத்தில், அமைச்சா்கள், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி வளா்ச்சித் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பொறுப்பாளருமான கோபால் ராய் தில்லியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், மத்திய அரசு புதிய சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா இந்திய அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது. தில்லி அரசின் ஆட்சிக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் நாடு தழுவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதைப் பாா்த்து மத்திய அரசு பயப்படுகிறது.

இதனால், தில்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் தில்லி அரசின் அனைத்து முடிவுகளுக்கும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய நிலை ஏற்படும். இந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை (மாா்ச் 17) மதியம் 2 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். தில்லி முதல்வா் கேஜரிவால் தலைமையில் நடக்கும் இந்த ஆா்ப்பாட்டத்தில், அமைச்சா்கள், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கவுன்சிலா்கள் கலந்து கொள்ளவுள்ளனா் என்றாா் அவா்.

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும், தில்லி தேசியத் தலைநகர திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை கொண்டு வந்தது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தில்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.