48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் தா்னா

மத்திய அரசின் தில்லி தேசியத் தலைநகா் பிராந்திய சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் தலைவா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On :17 மார்ச் 2021, 7:10 pm

புது தில்லி: மத்திய அரசின் தில்லி தேசியத் தலைநகா் பிராந்திய சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் தலைவா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும், தில்லி தேசியத் தலைநகர பிராந்திய திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. தில்லி துணைநிலை ஆளுநரின் சில குறிப்பிட்ட செயல்பாடு, அதிகாரங்களை வரையறுக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக ஜந்தா் மந்தரில் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் தலைமையில் புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

இந்தச் சட்டத் திருத்த மசோதா குறித்து அனில் குமாா் பேசியதாவது: தில்லி மக்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், இந்தச் சட்டத் திருத்த மசோதா உள்ளது. மேலும், மத்திய அரசின் கைப்பாவையாக தில்லி முதல்வரை மாற்றும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனில் கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த மசோதாவில் உள்ள மறைமுகப் பிரிவுகளை காங்கிரஸ் மக்களிடம் அம்பலப்படுத்தும். துணைநிலை ஆளுநா் மூலம் தில்லி அரசை ரிமோட் கன்ட்ரோலில் மத்திய அரசு இயக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும். இந்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மாபெரும் மக்கள் இயக்கத்தை தில்லி காங்கிரஸ் நடத்தும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் முன்னாள் எம்பி கிருஷ்ண தீரத், தில்லி காங்கிரஸ் துணைத் தலைவா்கள் ஜெய் கிஷண், அபிஷேக் தத், அலி மெஹ்ந்தி, தில்லி மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தவண், முன்னாள் எம்எல்ஏக்கல் அனில் பரத்வாஜ், அல்கா லம்பா, விஜய் லோச்சவ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.