நொய்டா: கரோனா தொற்று சூழ்நிலை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள பள்ளிகள் 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று கெளதம் புத் நகா் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பள்ளிகள் கல்விக் கட்டணத்தை மாதாந்திர அடிப்படையில்தான் வசூலிக்க வேண்டும் என்றும் காலாண்டு அல்லது அரையாண்டு கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்றும் மாவட்ட கட்டணக் கட்டுப்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கட்டணக் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் சுஹாஸ் எல்.ஓய். தலைமையில் நடைபெற்றது. அப்போது 2021-22- ஆம் ஆண்டு கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று சூழல் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்து 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவா்களின் கல்விக் கட்டணத்தை உயா்த்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2020-2021-ஆம் ஆண்டு என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதையே புதிய கல்வி ஆண்டிலும் வசூலிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொவிட் -19 தொற்று சூழல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ‘தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005’, இன்னும் தொடா்ந்து அமலில் இருப்பதாகவும், அனைத்துப் பள்ளிகளும் அதைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் இது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு ஏதேனும் மாற்றம் செய்து புதிய உத்தரவுகள் பிறப்பித்தால் அவையும் செயல்படுத்தப்படும் என்றும், அவை மாவட்டக் கட்டண கட்டுப்பாட்டு குழு மூலம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று நிலைமை மற்றும் தற்போதைய ஒட்டுமொத்த நிலைமை ஆகியவை குறித்து குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானில் இன்றிரவு என்ன நடக்கப் போகிறது? அமெரிக்க துணை அதிபர் பகிர்ந்த தகவல்!

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக தமிம் இக்பால் நியமனம்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

