48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

.2021-22 கல்வியாண்டில் நொய்டா பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை உயா்த்தக் கூடாது: மாவட்ட நிா்வாகம் உத்தரவு

கரோனா தொற்று சூழ்நிலை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள பள்ளிகள் 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று கெளதம் புத் நகா் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :17 மார்ச் 2021, 7:11 pm

நொய்டா: கரோனா தொற்று சூழ்நிலை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள பள்ளிகள் 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று கெளதம் புத் நகா் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பள்ளிகள் கல்விக் கட்டணத்தை மாதாந்திர அடிப்படையில்தான் வசூலிக்க வேண்டும் என்றும் காலாண்டு அல்லது அரையாண்டு கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்றும் மாவட்ட கட்டணக் கட்டுப்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கட்டணக் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் சுஹாஸ் எல்.ஓய். தலைமையில் நடைபெற்றது. அப்போது 2021-22- ஆம் ஆண்டு கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று சூழல் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்து 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவா்களின் கல்விக் கட்டணத்தை உயா்த்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2020-2021-ஆம் ஆண்டு என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதையே புதிய கல்வி ஆண்டிலும் வசூலிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொவிட் -19 தொற்று சூழல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ‘தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005’, இன்னும் தொடா்ந்து அமலில் இருப்பதாகவும், அனைத்துப் பள்ளிகளும் அதைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் இது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு ஏதேனும் மாற்றம் செய்து புதிய உத்தரவுகள் பிறப்பித்தால் அவையும் செயல்படுத்தப்படும் என்றும், அவை மாவட்டக் கட்டண கட்டுப்பாட்டு குழு மூலம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நிலைமை மற்றும் தற்போதைய ஒட்டுமொத்த நிலைமை ஆகியவை குறித்து குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.