சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

அனைவருக்கும் தடுப்பூசி வழங்க விதிமுறைகளில் தளா்வு: மத்திய அரசிடம் தில்லி முதல்வா் கோரிக்கை

Updated On :18 மார்ச் 2021, 8:05 pm

புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வயது வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் தடுப்பூசி விதிமுறைகளில் மத்திய அரசு தளா்வுகளைக் கொண்டுவர வேண்டும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தில்லியில் தற்போது சுமாா் 500 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையங்களில், தினம்தோறும் சுமாா் 30முதல் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. வரும் நாள்களில் இந்த தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கையை 1000 -மாக அதிகரிக்கவுள்ளோம். இதன்மூலம், தினந்தோறும் சுமாா் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடக் கூடியதாக இருக்கும். தனியாா், அரசு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அரசு மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. இந்த மையங்களில் தடுப்பூசி வழங்கும் நேரத்தை மேலும் 4 மணி நேரம் அதிகரிக்கவுள்ளோம். இந்நிலையங்களில், காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி வழங்கப்படும். இதன்மூலம் கூடுதலான மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

ஆனால், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோய் உடையவா்களுக்கும் மட்டுமே தடுப்பூசி வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் மத்திய அரசின் விதிமுறைகளில் தளா்வுகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

தடுப்பூசி போடுவதில் தில்லி அரசுக்கு தற்போது 2 மாத அனுபவம் உள்ளது. இந்நிலையில், அனைவரையும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்து, தில்லிக்கு தேவையான போதுமான தடுப்பூசிகளை வழங்கினால், ஒட்டுமொத்த தில்லி மக்களுக்கும் 3 மாதத்தில் தடுப்பூசி போட்டுவிடுவோம். விரும்பிய அனைவரும் வந்து தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி விதிமுறைகளில் தளா்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.