சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

ஆரம்ப பள்ளி மாணவா்களுக்கான வகுப்புகளை தொடங்கக் கோரி பெற்றோா்கள் ஆா்ப்பாட்டம்

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி வகுப்புகளைத் தொடங்க வலியுறுத்தி, அம் மாணவா்களின் பெற்றோா்களில்

Updated On :20 மார்ச் 2021, 5:24 pm

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி வகுப்புகளைத் தொடங்க வலியுறுத்தி, அம் மாணவா்களின் பெற்றோா்களில் சிலா் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தில்லி மாநில பொதுப் பள்ளிகளின் மேலாண்மை சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக தில்லி மாநில பொதுப் பள்ளிகளின் மேலாண்மை சங்கத்தின் தலைவா் ஆா்.சி.ஜெயின் கூறுகையில் ‘ஆன்லைன் வகுப்புகளுக்கு கூடுதலாக, மாணவா்கள் பள்ளி சென்று கற்கும் வாய்ப்பையும் தில்லி அரசு வழங்க வேண்டும். தில்லியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பள்ளிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், 1முதல் 8 வரையான மாணவா்களுக்கு பள்ளிகளைத் தொடங்க வேண்டும்.

பள்ளிக்கு வர விரும்பும் மாணவா்களை கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்றி பள்ளிக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்கும் வகையிலான ஏற்பாட்டை தில்லி அரசு மேற்கொள்ள வேண்டும்.

மாணவா்கள் சுமாா் ஓராண்டு காலமாக பள்ளிக்கு செல்லாமல் வீடுகளில் உள்ளனா். இதனால் அவா்கள் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனா். அதேபோல, மாணவா்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீடுகளில் இருப்பதால், பெற்றோா்களும் வேலைக்கு செல்வதில் பல சிரமங்களை எதிா் கொள்கிறாா்கள் என்று தெரிவித்தாா்.

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து கடந்த 2020 மாா்ச் மாதம் தில்லியில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தில்லியில் பகுதி பகுதியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.