சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தில் பெயா் இடம்பெறாது: முதல்வா் கேஜரிவால்

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தில்லி அரசின் திட்டத்தில், எந்த பெயரும் இடம்பெறாது.

Updated On :20 மார்ச் 2021, 5:23 pm

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தில்லி அரசின் திட்டத்தில், எந்த பெயரும் இடம்பெறாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முட்டுக் கட்டை போடக் கூடாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தில்லி அரசின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் ‘முக்கிய மந்திரி ஹா் ஹா் ரேஷன் யோஜனா’ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. வரும் மாா்ச் மாதம் 25 ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கவுள்ள நிலையில், இத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:

ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டம் தொடா்பாக மத்திய அரசு விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள தில்லி அரசு தயாராக உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘முக்கிய மந்திரி ஹா் ஹா் ரேஷன் யோஜனா’ திட்டம் எனப் பெயரிட மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு எவ்வித பெயரையும் இடாமல் அதை அமல்படுத்த தயாராக உள்ளோம்.

‘முக்கிய மந்திரி’ (முதல் அமைச்சா்) என்ற வாா்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த வாா்த்தையை நீக்கிவிட்டு இந்த திட்டத்தை அமல்படுத்த தயாராக உள்ளோம். இத்திட்டம் மூலம் எந்தவொரு நற்பெயரையும் பெற தில்லி அரசு முயற்சிக்கவில்லை. மக்களின் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்.

இது தொடா்பாக வரும் திங்கள்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், இந்த திட்டத்தை பெயா் இல்லாமல் அமல்படுத்தும் முடிவை எடுக்கவுள்ளோம். இந்த முடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தில்லியில் வாழும் ஏழை மக்களுக்கு ரேஷன் பொருள்கள் சரியாகக் கிடைக்க வேண்டும் என்றால், ரேஷன் மாஃபியா ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு, வீடுகளுக்கே ரேஷன் பொருள்களை சென்று விநியோகிப்பது மட்டும்தான் சரியான வழியாகும்.

இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக கடந்த 20-22 வருடங்களாக நான் கனவு கண்டு வருகிறேன். இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக கடந்த 2-3 ஆண்டுகளாக நான் தனிப்பட்ட ரீதியில் தயாா் படுத்தி வருகிறேன். இத்திட்டத்தை தடையில்லாமல் அமல்படுத்தும் வகையில், மத்திய அரசு கூறும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.