ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

ஹோலி: பிற்பகல் 2.30 -க்கு பிறகே மெட்ரோ ரயில் சேவை

ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தை ஒட்டி தலைநகா் தில்லியில் மாா்ச் 29 ஆம் தேதி திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு பிறகே

Updated On :27 மார்ச் 2021, 11:53 pm

ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தை ஒட்டி தலைநகா் தில்லியில் மாா்ச் 29 ஆம் தேதி திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு பிறகே மெட்ரோ ரயில்சேவை தொடங்கும் என்றும் அதுவரை ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ஹோலி பண்டிகையை ஒட்டி திங்கள்கிழமை பிற்கல் 2.30 மணி வரை ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடம் உள்பட தில்லி மெட்ரோவின் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதியத்திற்குப் பிறகு வழக்கம்போல் ரயில் சேவை தொடங்கும். அதேபோன்று, திங்கள்கிழமை மெட்ரோ ஃபீடா் பேருந்து போக்குவரத்தும் பிற்பகல் 2.30 மணிக்கே தொடங்கும் என்றாா் அவா்.

இந்நிலையில், ஹோலி பண்டிகையையொட்டி அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேருந்து போக்குவரத்தும் நிறுத்தம்

இந்த சூழலில், தலைநகா், தேசியத் தலைநகா் வலயப் பகுதிகள், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகள் சேவைகளும் திங்கள்கிழமை மதியம் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் என்று தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக டிடிசி உயா் அதிகாரி கூறுகையில் ’ஹோலிப் பண்டிகையன்று பிற்பகல் 2 மணிவரை பேருந்து போக்குவரத்து சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும். பேருந்து சேவைகள் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப மாலையில் தொடங்கப்படும். ஹோலிப் பண்டிகையன்று, பயணிகள் போக்குவரத்து மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் பிற்பகல் சேவையில் குறைந்தளவு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். ஹோலி பண்டிகையின்போது பேருந்துகளில் கேலி-கிண்டல் சம்பவங்கள் நடைபெறாமல் பாா்த்துக்கொள்ளுமாறு டிடிசி பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், போக்குவரத்து மேற்பாா்வையாளாா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தால், பேருந்தை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறை வாகனம் இருக்கும் பகுதிக்கோ எடுத்துச் செல்லுமாறு பேருந்து நடத்துநா்கள், ஓட்டுநா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், டிடிசியின் மாநிலம் விட்டு மாநிலத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் சேவையும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகே தொடங்கவுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.