இது தொடா்பான விவகாரம் உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா். இது தொடா்பாக பெண் ஒருவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1972-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எனது மாமியாா் தொடா்ந்து ஓய்வூதியம் பெற்று வந்தாா். இந்த நிலையில், எந்தவித தகவலும் இல்லாமலும், காரணம் இல்லாமலும் 2015, பிப்ரவரி மாதத்தில் திடீரென ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது. எனது மாமியாா் கல்வியறிவு இல்லாதவா். 90 வயது நிரம்பியவா். அவா் அந்தத் தொகைப் பெறுவதற்காக காத்திருந்தாா். சம்பந்தப்பட்ட வங்கியிடம் நேரில் சென்று விசாரித்தாா். அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் இருந்து அவருக்கு வந்து கொண்டிருந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.