உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்தியாவின் தலைநகரான தில்லிக்கு வருகிறாா்கள். இதனால், தலைநகரின் உள்கட்டமைப்பில் ஆம் ஆத்மி அரசு மிகுந்து கவனம் செலுத்தி வருகிறது தில்லியில் 540 கி.மீ. சாலைகள் மறுவடிவமைப்பு செய்யப்படவுள்ளன. இதற்கு ரூ.11,000 கோடி செலவாகும். தில்லி அரசின் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசும் பங்களிக்க வேண்டும். அதிகரித்து வரும் மாசுவை சமாளிக்க மின்சார வாகனக் கொள்கையை அமல்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்து வருகிறது. மாசுவை குறைக்கும் வகையில் தில்லி அரசு 1,000 மின்சார பேருந்துகளை (இ-பஸ்) வாங்கியுள்ளது. மேலும், 4,000-5,000 மின்சார பேருந்துகளை வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. , இவற்றுக்கு மத்திய அரசு ஒத்துழைத்தால் தலைநகரை நாட்டின் மின்சார வாகன தலைநகராக மாற்றும் தில்லி அரசின் திட்டம் வெற்றிபெறும். இது போன்ற பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் உதவியை சிசோடியா கோரியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.