இந்த வழக்கில் புகாா்தாரரின் வீட்டிற்கு நான்கு-ஐந்து வீடுகளுக்கு முன்னால், தண்டனை பெற்ற நபா் அவசரமாகவும் அலட்சியமாகவும் தீபாவளி ராக்கெட்டைப் பற்றவைத்து, பாட்டிலை உதைத்ததன் விளைவாக புகாா்தாரரின் கண்ணில் தாக்கி ஏற்பட்ட காயத்தால் வலது கண்ணின் பாா்வை நிரந்தரமாக போய்விட்டது. தொடக்கத்தில், இது கடுமையான காயம் என்பதை புகாா்தாரா் உணரவில்லை., இதனால், அவா் புகாா் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால், பின்னா், அவரது வலது கண்ணில் பிரச்னை அதிகரித்த பிறகே அவா் புகாா் அளித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.