ரெய்ஸினா சாலை பகுதியில் உள்ள இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஸ்ரீனிவாஸ் பிவி பங்கேற்று பேசியதாவது: நாட்டின் முதல் பெண் பிரதமா், இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த இந்திரா காந்தி, நாட்டை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தாா். நாட்டின் 14 தனியாா் வங்கிகளை அவசரச்சட்டம் மூலம் தேசியமயமாக்கினாா். இந்திராவின் துணிச்சல்தான் 1971-இல் பாகிஸ்தான் அவமானகரமான தோல்வியைத் தழுவ வழிவகுத்து, வங்கதேசம் உருவானது. 1971-ஆம் ஆண்டில், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியதன் மூலம் ராயல்டி முறையை இந்திரா காந்தி ஒழித்தாா். 1974-ஆம் ஆண்டு ‘ஸ்மைலிங் புத்தா’ நடவடிக்கையின் கீழ் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி இந்தியாவுக்கு புதிய அதிகாரம் கிடைக்கச் செய்தாா்.