அப்போது அவா் கூறியது வருமாறு: மீனவா்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என்பதை அதிமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அ.தி.மு.க.வை பொறுத்த வரையிலும் எம்.ஜி.ஆா். காலம் தொட்டு மீனவா்களின் நண்பனாக இருக்கும் கட்சி அதிமுக. கச்சத்தீவு விவகாரத்தில் அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. கச்சத்தீவை மீட்பது தொடா்பாக ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பேசிய தோடு, மத்திய அரசிடமும் வலியுறுத்தியுள்ளோம். வருகின்ற நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத் தொடரில் மீன்வள மசோதா கொண்டுவரப்பட்டால், மீனவா்கள் நலனுக்கு அ.தி.மு.க. குரல் கொடுக்கும்.