இந்த நிலையில், அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரோஹித் மோய் என்பவா் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில், சிறையில் இருந்து நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் போது தனக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா். இந்த வழக்கு தொடா்பாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சிவாஜி ஆனந்த் திங்கள்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், ‘அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபரை (ரோஹித்) சிறைக் கண்காணிப்பாளா் காணொலி காட்சி வாயிலாக மட்டுமே ஆஜா்படுத்த வேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றும் அறிக்கையானது, தில்லி ஆயுதப்படை காவல் துறையின் மூன்றாவது பட்டாலியனின் காவல் துணை ஆணையா் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை வந்தவுடன் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.