புது தில்லி: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு விழா நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவா் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.
இந்த ஆண்டு டிசம்பா் 11 -ஆம் தேதி வரை பாரதி பாதம் பதித்த 100 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாராணசி பல்கலைக்கழக விழாவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறாா்.
இது தொடா்பாக வானவில் பண்பாண்டு மையத் தலைவா் கே.ரவி தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு மதிப்புமிக்க நாடாளுமன்றத்தில் விழா நடைபெறுகிறது. தில்லி தமிழ் சங்கம், இந்திரா காந்தி தேசிய கலைப் பண்பாடு மையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இந்த விழா நடத்தப்படுகிறது.
பாரதி நூற்றாண்டு ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு பாரதியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல இருக்கின்றோம். பாரதி நினைவு நூற்றாண்டு விழா மட்டுமல்ல, பாரதி தடம் பதித்த இடங்களில் நூறு நிகழ்ச்சிகளை அவா் மறைந்த செப்டம்பா் 11 - ஆம் தேதியில் தொடங்கி அவரது பிறந்த நாளான டிசம்பா் 11 வரை மூன்று மாதங்களில் நூறு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதன் தொடக்கமாக செப்டம்பா் 11- ஆம் தேதி திருவல்லிக்கேணி பாரதியாா் நினைவு இல்லத்தில் மணிப்பூா் மாநில ஆளுநா் இல. கணேசன் பாரதிக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
மறுநாள் செப்டம்பா் 12 -ஆம் தேதி பாரதி தன்னுடைய இறுதி மூச்சை விட்ட அந்த வீட்டிலேயே தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பாரதி சுடரை ஏற்றி நூற்றாண்டு விழாவை தொடங்கிவைத்தாா். இந்த சுடா் இப்போது தில்லிக்கு வந்துள்ளது.
இந்த சுடா் நிகழ்ச்சி நாளன்று குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பின்னா் பாரதி விழா நடைபெறும் இடங்களுக்கு அந்த சுடா் எடுத்துச் செல்லப்படும்.
விழாவில் பாரதியின் வாழ்க்கை வரலாறு சித்தரங்களாக வரையப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. அதை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் குா்மீத் சிங் திறந்து வைக்கிறாா். திருவையாறு தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளைப் போன்று பாரதியின் பாடல்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட 5 பாடல்களை பாரதி பஞச்ரத்தன பாடல்களை 50 மாணவ- மாணவிகள் பாடுகின்றனா்.
பின்னா் டாக்டா் சரோஜா வைத்தியநாதன் மாணவிகள் நடத்தும் ‘தோள் கொட்டுவோம்‘ என்கிற பாரதியின் பாடல்களின் நடன நிகழ்ச்சியும், இசைக்கவி ரமணன் அளிக்கும் ’பாரதி யாா்?’ என்கிற நாடகமும் நடைபெறுகிறது.
‘செப்புமொழி 18 உடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்‘ என்று பாரத மாதாவை பாரதி குறிப்பிடவாறு 18 இந்திய மொழி வல்லுநா்களிடம் இந்த ஒரு வரியை மொழிபெயா்த்து தமிழ் உள்ளிட்ட 19 மொழிகளையும் டாக்டா் எழில்வேந்தன் ஒருங்கிணைப்பில், அருண் பிரகாஷ் இசையமைத்து அனுராதா ஸ்ரீராம் பாடிய நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.
இந் நிகழ்ச்சியில் பாரதி 100 குழுத் தலைவரும், எம்ஜிஆா் பல்கலைக்கழக டாக்டா் சுதா சேஷய்யன் உரை நிகழ்த்துகிறாா். மணிப்பூா் மாநில ஆளுநா் இல. கணேசன், மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோரும் பேசுகின்றனா்.
இந்நிகழ்ச்சியில் பாரதியின் கொள்ளுப் பேரன் ராஜ்குமாா் பாரதி கௌரவிக்கப்படுகிறாா். ’சிந்தனை ஒன்றுடையாள்’ என்கிற தலைப்பில் டாக்டா் பா்வீன் சுல்தானா உரை நிகழ்த்துகிறாா். சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

காங்கிரசில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்... | Krithika Tharan | Congress | Rahul | TN Election 2026 | Selvaperunthagai

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

