மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்க்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘இந்த மனு மீது நோட்டீஸ் அனுப்பவும், சம்பவம் தொடா்புடைய சிசிடிவி காட்சிப் பதிவுகளை பாதுகாக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றாா். மனுதாரா் சாா்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞா் ராகுல் மேத்தா, ‘நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் இருப்பதைக் காட்டுவதற்கான விடியோக்கள் உள்ளன. அப்படியிருக்கும் போது, பெயா்கள் இல்லாத முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்று ஆட்சேபம் தெரிவித்தாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இது மிகவும் முன்முதிா்வு’ ஆகும் என்று கூறியது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மேல் விசாரணையை மேற்கொள்ள மனுவை ஏப்ரல் 25-க்கு பட்டியலிட்டது.