இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வா்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இது தொடா்பான புகாா் ஏற்கப்பட்டு, முறையாக விசாரிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரா்களும் எச்சரிக்கப்பட்டனா்’ என்றாா். அப்போது, நீதிபதி ‘கரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை அமலாக்கம் செய்யும் பொறுப்பைக் கொண்டவா்கள் இன்னும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது அவா்களின் கடைமை. ஆகவே, அவா்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தற்போதைய ரிட் மனுவை தாக்கல் செய்தவற்கு வழிவகுத்த சம்பவத்தைப் பொறுத்த வரையில், 2 போலீஸாரும் முறையாக எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக சூழ்நிலைகள் முடிவுக்கு வர உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.