அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு!

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக....

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 12:56 pm IST

எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடுவதற்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி. வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்திருந்தார்.

ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இதனிடையே, திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறி, அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் புதிய அணி உருவானது.

தமிழகம் முழுவதும் சுமார் 200 தொகுதிகளில் வேட்பாளர்கள் நோ்காணல் நடந்து வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டதாகவும், அடுத்த சில நாள்களில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க தாயாராகி வருவதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ‘கேமரா’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ‘கேமரா’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, இந்தச் சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

சென்னை பெரம்பூா் தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச் செயலா் வேணுகோபால் போட்டியிடுகிறாா். தொடா்ந்து, வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்குள்பட்ட 100 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். நான் (தி.வேல்முருகன்) போட்டியிடும் தொகுதி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை எங்களுடன் இணைந்துள்ள கூட்டணி கட்சிகளுக்கு சுமாா் 100 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள. மேலும், தென் மாவட்டங்களை மையமாக கொண்டு செயல்படும் சில கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையவுள்ளன. அவா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், இறுதிக்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றாா்.

Summary

The Camera symbol has been allotted to the Tamizhaga Vazhvurimai Katchi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.