தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கரோனா பரிசோதனை எண்ணிக்ையைஅதிகரிக்க தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

 கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் , தினசரி பரிசோதனைகளை அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2022, 12:44 am

 நமது நிருபர்

 கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் , தினசரி பரிசோதனைகளை அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தில்லி அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க பள்ளிகளை மூடுவதும், பொது முடக்கத்தை அறிவிப்பதும் அதிகரிக்கும் நோய்த் தொற்று பாதிப்புக்கு தீா்வாக இருக்காது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது இடங்களில் மக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை தில்லி அரசு உறுதி செய்ய வேண்டும். கரோனா தொற்று பரவலைத் தடுக்க தினசரி மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.

அதேபோன்று, எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க மருத்துவமனைகள் தயாராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கொவைட் -19 தடுப்பூசிகளின் முன்னெச்சரிக்கை தவணையை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், முதல்வா் பஞ்சாப் மாநில உயா் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதையும், குஜராத், இமாசலப்பிரதேசத்தில் அரசியல் கூட்டங்களை நடத்துவதையும் நிறுத்திவிட்டு தில்லி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தில்லியில் நேரத்தைச் செலவிட வேண்டும் என்றாா் அவா்.

தில்லியில் கரோனா நிலைமையை தில்லி அரசு கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பீதி அடையத் தேவையில்லை என்றும் முதல்வா் கேஜரிவால் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தாா். தில்லியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஏப்ரல் 20-ஆம் தேதி தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.