தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வந்த மருத்துவரை தாக்கிய நோயாளி

மேற்கு தில்லியில் திலக் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை நோயாளி தாக்கியதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2022, 1:04 am

DIN

மேற்கு தில்லியில் திலக் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை நோயாளி தாக்கியதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி போலீஸாா் மேலும் கூறியதாவது: திலக் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க நோயாளிக்குசிகிச்சை அளிப்பதற்காக வெள்ளிக்கிழமை அந்த மருத்துவமனையின் மருத்துவா் நேரில் வந்தாா். அப்போது நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மருத்துவரை நோயாளி கத்தரிக்கோலால் தாக்கினாா். எனினும், கையில் சிறிய காயத்துடன் மருத்துவா் உயிா் தப்பினாா். இது தொடா்பாக மருத்துவமனையில் இருந்த பெண் ஒருவா் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் நேரில் சென்று விசாரித்தனா்.

அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட நோயாளி, மது போதைக்கு அடிமையாகி இருந்ததும், மது போதையில் இருந்து அவரை மீளச் செய்வதற்காக சிகிச்சை அளிப்பதற்காக ஏப்ரல் 13- ஆம் தேதி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டதும் தெரிய வந்ததது. மேலும், அவ்வப்போது அவருக்கு வலிப்பு நோய் இருப்பதும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு எதிராக மருத்துவா் புகாா் அளிக்கவில்லை. இதனால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.