இந்த மனுவை நவம்பா் 9-ஆம் தேதி விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகை நகல்களை வழங்க உத்தரவிட்ட போதும், குறியிடப்படாத ஆவணங்களை வழங்கும் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து அமலாக்கப் பிரிவு துணை இயக்குந தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது. இந்த நிலையில், கடந்த மாா்ச் 30-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சான்றளிக்கப்பட்ட குறியிடப்படாத ஆவணங்களின் நகல்கள் வழங்குவது தொடா்பாக சிறப்பு நீதிமன்றத்தின் குறிப்பிட்ட உத்தரவை ரத்து செய்தும், அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னா் அதன் நகல்களை வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு புதிதாக மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டது.