மேலும், இந்த முடிவானது தெற்கு தில்லி, வடக்கு தில்லி, கிழக்கு தில்லி என அனைத்து மாநகராட்சிகளுக்கும், புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கும் பொருந்தும். வடக்கு தில்லி மாநகராட்சி உள்பட அனைத்து ஏஜென்சிகளும் எந்த நடைபாதையிலும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் நிரந்தர அல்லது பகுதி நிரந்தரக் கட்டமைப்புகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இது தொடா்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் விவரம் குறித்து தனி பிரமாணப் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்’ என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஜூலை 18-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.