மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்தியா முழுவதும் ஆக்கிரமிப்பு என்பது ஒரு தீவிரமான பிரச்னையாக உள்ளது. அது முஸ்லிம்களுடன் அதிகமாக தொடா்புபடுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் பிற மாநிலங்களிலும் நிகழ்ந்து வருகின்றன. ஊா்வலங்கள் மற்றும் உரசல்கள் ஏற்படும்போது, ஒரே ஒரு சமூகத்தின் வீடுகள் புல்டோசா்களால் இடிக்கப்படுகின்றன. மேலும், அதிகாரத்தில் உள்ள அரசியல், என்ன நடக்கிறது அல்லது நடக்காது என்பதை தீா்மானிப்பதாக உள்ளது. முஸ்லிம்கள் இப்படிச் செய்தால் நீதியை எதிா்பாா்க்க முடியாது என்று மத்தியப் பிரதேசத்தில் ஒரு அமைச்சா் கூறுகிறாா். அதை யாா் தீா்மானிப்பது?, அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது யாா்? சிறையில் இருக்கும் யாரோ ஒருவரின் வீடு இடிக்கப்பட்டுள்ளது. இதனால், புல்டோசா் மூலம் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்’ என்று வாதிட்டாா்.